இந்தியா

ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது ஆதித்யா எல்-1 விண்கலம்: இஸ்ரோ

Published On 2024-07-02 16:04 GMT   |   Update On 2024-07-02 16:04 GMT
  • ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.
  • விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டபடி ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது.

புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

கடந்த மே மாதம் 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பியது.

இந்நிலையில், ஆதித்யா எல்.1 விண்கலம் 178 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்ளி-1ல் தனது ஒளிவட்ட பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என இஸ்ரோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News