இந்தியா (National)

ரெயிலில் மேல் படுக்கை கீழே விழுந்ததால் படுகாயமடைந்த நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு

Published On 2024-06-26 11:38 GMT   |   Update On 2024-06-26 11:38 GMT
  • கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்தது.
  • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே அமைச்சரை கேரளா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் மீது நடுப் படுக்கை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நடு படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

ரெயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் உள்ளது.

  • போதுமான ரெயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை.
  • நீங்கள் பாதுகாப்பாக ரெயிலில் ஏற முடியாது.
  • நீங்கள் ரெயிலில் ஏற முடிந்தால், இருக்கை இருக்காது.
  • உங்களுக்கு ரெயிலில் இருக்கை கிடைத்தாலும், ரெயில் விபத்து, 'இருக்கை விழுந்து விபத்து' போன்றவற்றில் நீங்கள் கொல்லப்படலாம்"

என்று பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News