இந்தியா

ஐக்கிய ஜனதாதள கட்சியின் செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா

Published On 2024-09-01 13:00 GMT   |   Update On 2024-09-01 13:00 GMT
  • மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
  • மத்திய பா.ஜ.க. அரசை அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.

புதுடெல்லி:

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பொதுசிவில் சட்ட விவகாரம், வக்பு வாரிய மசோதா ஆகிய விவகாரங்களில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே, கே.சி.தியாகி விமர்சனத்துக்கு ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தம்மை கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிதிஷ்குமாருக்கு கே.சி.தியாகி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து கே.சி.தியாகி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News