இந்தியா

பெண் டாக்டர் பாலியல் கொலை: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்

Published On 2024-08-21 12:50 GMT   |   Update On 2024-08-21 12:50 GMT
  • ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.
  • இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக 31 வயதான சஞ்சய்ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இவன் போலீசாரிடம் தன்னார்வ தொண்டனாக பணிபுரிந்து வந்தவன். அதை பயன்படுத்தி தான் அவன் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.

இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான். அதில் அவன் கூறி இருப்பதாவது:-

கடந்த 8-ந்தேதி இரவு நானும், எனது நண்பனும் வடக்கு கொல்கத்தாவில் விபசாரம் நடக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கு நாங்கள் நள்ளிரவு வரை உல்லாசமாக இருந்தோம்.

பிறகு நள்ளிரவு 2 மணிக்கு மற்றொரு சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கும் நீண்ட நேரம் பெண்களுடன் இருந்தோம். அதன் பிறகு தனது நண்பன் மோட்டார் சைக்கிளில் அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

அதிகாலை 3.50 மணிக்கு நான் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். வளாகத்தில் அமர்ந்து மது அருந்தினேன். 4 மணி அளவில் கருத்தரங்கு நடக்கும் கூடத்துக்கு தூங்கலாம் என்று சென்றேன்.

அப்போது அங்கு பயிற்சி பெண் டாக்டர் தூங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் மீது பாய்ந்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டேன். அவர் அலறினார். இதனால் அவரது கழுத்தை நெரித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது எனக்கு தெரியாது.

இவ்வாறு அவன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

மேலும் அவன் கூறுகையில், "மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் சிக்கி விட்டேன். என்னிடம் விசாரிப்பது போல கல்லூரி முதல்வரையும் விசாரிக்க வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்," என்றான்.

Tags:    

Similar News