இந்தியா (National)

லட்டு சர்ச்சை- நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்

Published On 2024-09-23 14:57 GMT   |   Update On 2024-09-23 14:58 GMT
  • கடந்த சனிக்கிழமை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • விளக்கம் அளிக்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ்.

திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பதாக உறுதியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.டைரி நிறுவனத்தில், கடந்த சனிக்கிழமை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News