இந்தியா (National)

லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு.. வீடுகளில் விளக்கேற்றி, மந்திரம் படியுங்கள்.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

Published On 2024-09-23 12:11 GMT   |   Update On 2024-09-23 12:11 GMT
  • இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • விளக்கேற்றி மந்திரம் படித்தால் தோஷம் விலகும் என நம்பிக்கை.

திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தை தொடர்ந்து, பக்தர்கள் தங்களின் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, "ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹே" என மந்திரம் படிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை வேண்டி மந்திரம் உச்சரிக்குமாறு பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News