இந்தியா

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு

Published On 2024-08-09 11:26 GMT   |   Update On 2024-08-09 11:26 GMT
  • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இதில் உள்ளனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பிறப்பித்துள்ளார்.

பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

இந்த கூட்டுக் குழுவானது மசோதா குறித்து ஆய்வுசெய்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

Tags:    

Similar News