இந்தியா (National)

தொகுதி பங்கீடு முடிவாகாத நிலையில் 45 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனா

Published On 2024-10-23 01:24 GMT   |   Update On 2024-10-23 01:24 GMT
  • அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு.
  • உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது ஆதரவு அளித்த அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் வாய்ப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க. மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மகாயுதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது இருந்த, தனக்கு ஆதரவு அளித்த சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானே நகரில் கோப்ரி-பஞ்ச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

Tags:    

Similar News