இந்தியா (National)

காதல் சின்னம்... மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் தாஜ் மஹாலை பார்வையிட்டார்

Published On 2024-10-08 11:17 GMT   |   Update On 2024-10-08 11:17 GMT
  • நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
  • இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.

பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.

மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News