இந்தியா

கெஜ்ரிவால் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி

Published On 2024-07-26 14:45 GMT   |   Update On 2024-07-26 14:45 GMT
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
  • இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல் மந்திரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வரும் 27-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

இதற்கிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று மாலை டெல்லி வந்தடைந்தார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற மம்தா பானர்ஜி, அங்கு கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஆம் ஆத்மி எம்.பி.யான ராகவ் சதா உடனிருந்தார்.

Tags:    

Similar News