இந்தியா

மங்களூரு சிறையில் திடீர் சோதனை: செல்போன்-கஞ்சா பறிமுதல்

Published On 2024-07-25 05:34 GMT   |   Update On 2024-07-25 05:34 GMT
  • அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
  • 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.

இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News