இந்தியா

மகன் திருமண விழாவில் கண்ணீர் சிந்திய முகேஷ் அம்பானி - வீடியோ வைரல்

Published On 2024-07-15 05:41 GMT   |   Update On 2024-07-15 05:41 GMT
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  • திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில், மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தன் குடும்பத்தாரை விட்டு பிரியும் போது முகேஷ் அம்பானி கண் கலங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மெதுவாக நடந்து செல்கின்றனர். அப்போது, ராதிகாவுக்கு மற்றொரு நபர் வெள்ளி விளக்கைக் கொடுக்கிறார். இதை பார்க்கும் முகேஷ் அம்பானி கண் கலங்கி எமோஷனலாக காணப்பட்டார்.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், நான் முகேஷ் அம்பானியை இந்த காரணத்திற்காகவே விரும்புகிறேன். அவர் உணர்ச்சிகளைக் காட்டுகிறார் மற்றும் தனது மருமகளை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்துகிறார் என்றார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி பேசும் போது, முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

Full View

Tags:    

Similar News