இந்தியா

அரசியல் வேண்டாம்னு எவ்ளோ சொல்லியும் கெஜ்ரிவால் கேக்கல.. அன்னா ஹசாரே ஆதங்கம்

Published On 2024-09-16 08:49 GMT   |   Update On 2024-09-16 08:51 GMT
  • அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்
  • ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அன்னா ஹசாரே கடந்த 2011 ஆம் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் ஆவார். இவரது இயக்கத்தில் இணைத்து போராட்டங்களில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி டெல்லியில் ஆட்சியை பிடித்தார்.''

இந்நிலையில் தற்போது அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். டில்லி மதுபான கோள்களை வழக்கில் 6 மாதமாக திகார் சிறையிலிருந்த கெஜ்ரிவால் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அவர் டெல்லிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில் தற்போது அன்னா ஹசாரே கூறியதாவது, அரசியலில் நுழைய வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே கெஜ்ரிவாலை நான் எவ்வளவோ தடவை எச்சரித்தேன். சமூக சேவை செய்வதில்தான் உண்மையான திருப்தி உள்ளது என்று கூறினேன்.ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்கவில்லை. எனது அறிவுரையைக் கருத்தில் கொள்ள கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இப்போது அவருக்கு என்ன நடந்துள்ளதோ அது தவிர்க்க முடியாதது. கெஜ்ரிவால் மனதில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேட்டில் கைதானபோது பேசியிருந்த அன்னா ஹசாரே, நான் கெஜ்ரிவால் மீது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News