இந்தியா

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

Published On 2024-09-09 13:05 GMT   |   Update On 2024-09-09 13:05 GMT
  • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
  • குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது.

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவருக்கு அறிகுறி காணப்பட்டது. அதைதொடர்ந்து, பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொது மக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று கிளேட் 2 வகையை சார்ந்தது என்றும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள கிளேட் 1 வகையை சார்ந்தது அல்ல என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த வகை நோய் தொற்று 2022, ஜூலை மாதம் இந்தியாவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தொற்று எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News