இந்தியா (National)

டெல்லியில் கடும் காற்று மாசு- மூச்சு திணறலால் மக்கள் அவதி

Published On 2024-10-27 07:52 GMT   |   Update On 2024-10-27 07:52 GMT
  • விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
  • நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு நிலவி வருகிறது. இந்த நிலையில் காற்று மாசு கடுமையாக இருந்தது. ஆனந்த் விஹார் பகுதியில் இன்று காலை காற்றின் தர குறியீடு 405-யை தாண்டியது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.

ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 352 ஆக இருந்தது. நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த காற்று மாசுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News