இந்தியா

வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலை: பிரதமர் மோடி

Published On 2024-08-15 13:06 GMT   |   Update On 2024-08-15 13:06 GMT
  • வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும்.
  • வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம் என்றார் பிரதமர் மோடி.

புதுடெல்லி:

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள்.

வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும். வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News