இந்தியா

குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்கா பயணம்

Published On 2024-09-17 17:31 GMT   |   Update On 2024-09-17 17:31 GMT
  • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்.
  • 22-ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News