இந்தியா (National)

ஜம்மு காஷ்மீர் 2வது கட்ட தேர்தல்: வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

Published On 2024-09-25 02:30 GMT   |   Update On 2024-09-25 02:30 GMT
  • 2வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
  • காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்தருணத்தில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News