இந்தியா (National)

லாவோஸ் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி- 2 மாநாடுகளில் பங்கேற்கிறார்

Published On 2024-10-10 02:43 GMT   |   Update On 2024-10-10 02:43 GMT
  • ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடக்கிறது.
  • மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது. ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது.

இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக 2 நாள் பயணமாக இன்று அவர் லாவோஸ் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மேற்படி 2 மாநாடுகளிலும் பங்கேற்கிறார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் இது பிரதமரின் பத்தாவது வருகை என்றும் அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு செயலாளர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News