இந்தியா (National)

விபரீதமான பிராங்க்- 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரைவிட்ட பெண்: வைரல் வீடியோ

Published On 2024-07-17 09:32 GMT   |   Update On 2024-07-17 10:24 GMT
  • டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
  • காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே தனது நண்பர்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்ட பெண், கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மணப்பாடா காவல்துறை விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்தார்.

அவரது நண்பர்களில் ஒருவர் அதே சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயர் தப்பினார். இவை, அங்கு பொருத்தப்பட்டிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பரபரப்பான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News