இந்தியா

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்

Published On 2024-07-31 11:41 GMT   |   Update On 2024-07-31 11:41 GMT
  • கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.
  • 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்குமுன் தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததையடுத்து, ப்ரீத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவியேற்கவுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் 29 வரை இப்பதவியில் இருப்பார். 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

யுபிஎஸ்சியின் 2 ஆவது பெண் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு ஆர் எம் பாத்யூ என்பர் யுபிஎஸ்சியின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

Tags:    

Similar News