இந்தியா

கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது- மீண்டும் சேர்க்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2024-07-02 07:41 GMT   |   Update On 2024-07-02 07:46 GMT
  • இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
  • எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது தான் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

எனது கருத்துகளை பதிவுகளிலிருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அதில் தெரிவித்துள்ளார்.




 


Tags:    

Similar News