இந்தியா (National)

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Published On 2024-10-22 04:54 GMT   |   Update On 2024-10-22 06:45 GMT
  • மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
  • பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை புயலாக வலுவடைய உள்ளதால், கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பத்தனம் திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News