இந்தியா

ரூ. 6,750 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் இண்டிகோ இணை நிறுவனர் ராகேஷ் கங்வால்

Published On 2024-08-29 05:25 GMT   |   Update On 2024-08-29 05:25 GMT
  • 1.47 பங்குகளை விற்பனை செய்கிறார். இது மொத்த பங்குகளில் 3.8 சதவீதம் ஆகும்.
  • 2022-ல் இருந்து தனது பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.

இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் (InterGlobe Aviation Ltd) நிறுவனத்தின் 1.47 கோடி பங்குகள் அல்லது 3.8 சதவீதம் பங்குகளை இண்டிகோ நிறுவனத்தின் இணை-நிறுவனரான ராகேஷ் கங்வால் விற்பனை செய்கிறார்.

இந்த பங்குகளின் மொத்த மதிப்பு 804 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 6750 கோடி ரூபாய்) ஆகும். ஒரு பங்கின் விலை 4593 ரூபாய் ஆகும்.

கங்வால் ஆதரவு பெற்ற குரூப் இன்டர்குளோப் அவியேசன் நிறுவனத்தின் 19.38 சதவீத பங்குகளை வைத்திருந்தது. கங்வால் 5.89 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இந்த விற்பனைக்குப் பிறகு கங்வால் ஆதரவு பெற்ற குரூப்பின் பங்கு சதவீதம் 15.58 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜே.பி. மோர்கன், கோல்டுமேன் சச்ஸ், மோர்கன் ஸே்டேன்லி இந்தியா ஆகியவை இந்த பங்கு விற்பனையை நடத்தும் எனத் தெரிகிறது.

இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் இண்டிகோவை இயக்கி வருகிறது. இந்தியா மிகப்பெரிய விமான சேவையை மேற்கொள்ளும் இந்த நிறுவனம் இந்திய பங்குசந்தையில் 62 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 16.9 சதவீத பங்குகளை வெளிநாட்டு மார்க்கெட்டில் வைத்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோர் இணை நிறுவனர்கள். 2019-ல் இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. 2022-ல் முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தனத பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.

Tags:    

Similar News