இந்தியா

ரக்ஷா பந்தன்- ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-08-19 04:07 GMT   |   Update On 2024-08-19 04:07 GMT
  • ரக்ஷா பந்தன் சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது.
  • ரக்ஷா பந்தன் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்.

ரக்ஷா பந்தன் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ரக்ஷா பந்தனின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான ரக்ஷா பந்தன் விழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது. இந்த பண்டிகை நாளில், நமது சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய அனைத்து நாட்டு மக்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணன்-சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

இந்த புனித பண்டிகை உங்கள் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ரக்ஷா பந்தன் தினமான இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டார் பகுதியின் எல்லைக்கோட்டிலுள்ள சோனி கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உள்ளூர்வாசிகள் 'ராக்கி' கட்டி இனிப்பு வழங்கினர்.

Tags:    

Similar News