இந்தியா (National)

டெல்லி செங்கோட்டையில் ராம்லீலா.. மோடி- ராகுல் காந்தி பங்கேற்பு.. களைகட்டிய தசரா கொண்டாட்டம் - வீடியோ

Published On 2024-10-12 15:44 GMT   |   Update On 2024-10-12 15:46 GMT
  • செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

இந்துக்களின் புனிதப் பண்டிகையான நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரவு ராவணன் பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

இதுபோல மகாராஷ்டிரா, பீகார், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News