இந்தியா (National)

ஜே.எம்.எம். என்றால் என்ன தெரியுமா?: மத்திய மந்திரி அளித்த புது விளக்கம்

Published On 2024-09-25 04:32 GMT   |   Update On 2024-09-25 05:56 GMT
  • ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
  • அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும் என்றார்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பஹரகோரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நடைபெறுவது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆட்சி அல்ல, ஹேமந்த் சோரனின் குற்றம், கொலை, கொள்ளை அரசு என காட்டமாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

இந்தக் கூட்டத்துக்கு மேகங்கள் திரண்டு வந்து நெருக்கடியாக உள்ளன. ஆனால் இந்த மேகங்களை விட ஹேமந்த் சோரன் அரசு பெரிய நெருக்கடியாக உள்ளது.

இது ஜே.எம்.எம். அரசு அல்ல, ஹேமந்த் சோரன் நடத்தும் குற்றம், கொலை, கொள்ளை அரசு.

ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும்.

மேகங்கள் பொழிகின்றன, மின்னல்கள் மின்னுகின்றன, கனமழை பெய்கிறது, ஆனால் இன்னும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்.

இதைப் பார்த்தால் விரைவில் இருள் மறையும், சூரியன் உதிக்கும். தாமரை மலர்ந்து மாற்றம் வரும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News