இந்தியா

விநாயகர் சதுர்த்தி வழிபாடு- விமர்சனத்துக்கு உள்ளான கவனிப்பு

Published On 2024-09-13 06:09 GMT   |   Update On 2024-09-13 06:09 GMT
  • தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.
  • 8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் காலை, மாலை இருவேளையிலும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்கின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சிலையை வழிபடும் வி.ஐ.பி.களுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பை லால்பாக் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வழிபடும் விஐபிகளுக்கு சிறப்பான கவனிப்பும், பொது வரிசையில் நின்று வழிபட்டவர்களை கழுத்தை பிடித்து தள்ளுகின்றன.

8 வினாடிகளே ஓடும் வீடியோவை பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News