இந்தியா (National)

ட்ரீட் வைக்காத ஆத்திரத்தில் சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்

Published On 2024-09-24 12:34 GMT   |   Update On 2024-09-24 12:34 GMT
  • சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
  • போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர்.

டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் 16 வயது சிறுவன், புதிய போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்கவில்லை என்று கூறி சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை சச்சின் என்ற சிறுவன் புதிய போன் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது போன் வாங்கியதற்காக ட்ரீட் வைக்க வேண்டும் என்று அவரது 3 நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சச்சின் மறுத்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சச்சினை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். பின்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 16 வயது உள்ள 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

Tags:    

Similar News