இந்தியா (National)

பட்ஜெட்டில் திரைத்துறைக்கும் ஒன்றுமில்லை.. நாட்டுக்கும் ஒன்றுமில்லை - ஜெயா பச்சன் போராட்டம்

Published On 2024-07-24 09:38 GMT   |   Update On 2024-07-24 12:39 GMT
  • சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்
  • பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சந்தித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி  ஆட்சியமைத்த பின் நாட்டின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் மீது 83 நிமிடங்கள் உரையாற்றினார். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் ஆளும் மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கியும், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்தும் இந்த பட்ஜெட் தாக்களாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்து ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி  மாநிலத் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

 போரட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட்டில் திரைத்துறைக்கு என்று எதுவும் இல்லை, நாட்டுக்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக  சினிமா டிக்கெட் தொடர்பான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைத்துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News