இந்தியா (National)

அஜித் பவாருக்கு ஒர்க் அவுட் ஆன டைம்.. கடிகார சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - உச்சநீதிமன்றம்

Published On 2024-10-24 11:45 GMT   |   Update On 2024-10-24 11:45 GMT
  • எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியது
  • கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்

அஜித் பவருக்கு ஒர்க் அவுட் ஆன டைம்.. கடிகார சின்னத்தை பயன்படுத்த தடை இல்லை - உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவமபர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் மாகாயுதி [ பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன.

சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரசை [என்சிபி] அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு கொடுத்தனர். அஜித்பவாரின் ஆதரவாளர்கள் 9 பேருக்கு பா.ஜ.க., கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

 

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் என்சிபி கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கி அவரது தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் சரத் பாவருக்கு வேறு சின்னம் ஒதுக்கி அவரது தலைமையிலான அணி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) என்று அழைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.

 

கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவார் அணிக்குக் கொடுத்ததை எதிர்த்து சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அம்மனு நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மீதான தீர்ப்பு வரும்வரை அஜித் பவாரின் கடிக்காத சின்னத்தை முடக்க வேண்டும் என்று சரத்பவார் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபான்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அஜித் பாவர் கடிகார சின்னத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

 மேலும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கவே வழங்கப்பட்ட அறிவுறுதல்களின்படி கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வாக்காளர்களைக் குழப்பி திசை திருப்பும் விதமான செயல்களில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

எனவே நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவார் கடிகார சின்னத்தைப் பயன்படுத்த உள்ளதால் இந்த தீர்ப்பு சரத் பவாருக்கு பின்னடைவாக அமைத்துள்ளது. முன்னதாக அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்ட 38 பேரில் 26 பேர் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர்.

Tags:    

Similar News