இந்தியா (National)

பெண் டாக்டர் கற்பழித்து கொலை: திரிணாமுல் காங்கிரஸ் மேல்சபை எம்.பி. ராஜினாமா

Published On 2024-09-08 09:05 GMT   |   Update On 2024-09-08 09:05 GMT
  • பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன்.
  • மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. ஜவர் சிர்கார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன். மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. நீதி வழங்க வேண்டும். நான் எனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News