இந்தியா (National)

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

Published On 2024-07-24 13:34 GMT   |   Update On 2024-07-24 13:34 GMT
  • விமான நிலையங்களுக்கு இணையாக 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்படுகிறது.
  • காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. சுமார் 1,302 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையங்களுக்கு இணையாக சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.

தமிழகத்தில் பல்வேறு ரெயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது.

ரெயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News