இந்தியா (National)

என்னை பார்க்க வேண்டுமா? ஆதார் அட்டை கொண்டு வாருங்கள் - கங்கனாவின் வித்தியாசமான நிபந்தனை

Published On 2024-07-11 06:02 GMT   |   Update On 2024-07-12 09:29 GMT
  • நான் மண்டியில் இருக்கும் ஒவொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
  • என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும்.

இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என வித்தியாசமான நிபந்தனையை கங்கனா விதித்துள்ளார்.

நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி. கங்கனா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.

ஆதலால் என தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News