இந்தியா (National)

மூத்த அரசியல் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தினார் யூசுப் பதான்

Published On 2024-06-04 13:07 GMT   |   Update On 2024-06-04 13:14 GMT
  • யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
  • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.

பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.

இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News