இந்தியா (National)

பா.ஜ.க.-வுக்கு சாதகமாக காற்று வீசுகிறது: 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்- அரியானா முதல்வர் சைனி

Published On 2024-10-05 06:26 GMT   |   Update On 2024-10-05 06:26 GMT
  • மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும்.
  • கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடித்துள்ள பா.ஜ.க. இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் கூறியதாவது:-

பா.ஜ.க.-வுக்கு சாதகமாக காற்று வீசுகிறது. அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும். கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனவு கண்டார்கள்.

அவர்களுடைய பணிகளை அவர்கள் உற்று நோக்க வேண்டும். அவைகள் வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தலித் மக்களை அவர்கள் இழிவுப்படுத்தியதை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

Tags:    

Similar News