இந்தியா

கேள்வி கேட்கலாம், விவாதம் கூடாது: மணிப்பூர் குறித்து கேள்வி கேட்ட நிருபரிடம் அமித் ஷா கறார்...

Published On 2024-09-18 02:32 GMT   |   Update On 2024-09-18 02:32 GMT
  • மணிப்பூர் மாநில முதல்வர் இன்னும் ஏன் பதவியில் நீடிக்கிறார்?
  • பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வாரா? என நிருபர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அவர் 3-வது முறையாக பதவி ஏற்று நேற்றுடன் 100 நாள் நிறைவடைந்தது. 100 நாட்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள், நாட்டின் வளர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் அமித் ஷாவிடம் "வன்முறை தொடர்ந்து நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பிரேன் சிங் தொடர்ந்து நீடித்து வருவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமித் ஷா "நீங்கள் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் விவாதம் கூடாது" என்றார்.

மேலும், "பிரதமர் மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிப்பூருக்கு செல்வாரா?" என்று கேள்வி கேட்டார். அதற்கு "அதுபோன்ற முடிவு ஏற்பட்டால், கட்டாயம் உங்களுக்கு தெரியும்" என அமித் ஷா பதில் அளித்தார்.

மணிப்பூர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்து தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த வன்முறைக்கு 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக மோதல் அதிகரித்துள்ளது, கிளர்ச்சி குழுக்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News