புதுச்சேரி

லாட்ஜியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

Published On 2024-08-09 11:24 GMT   |   Update On 2024-08-09 11:24 GMT
  • சந்திரசேகர் என்பவர் கடந்த 7-ந்தேதி குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
  • இன்று விடுதி அறையில் விசம் குடித்து உயிரை மாய்த்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் கடந்த 7-ம் தேதி அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிரபல விடுதியில் தங்கியுள்ளனர்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று விடுதியில் இருந்து வெளியேற இருந்த நிலையில் அவர்கள் 4 பேரும் அறையிலேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து பெரியகடை காவல்துறைக்கு விடுதில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் பிரச்சனையா? இல்ல வேறு எது பிரச்சனையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News