புதுச்சேரி

நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்

Published On 2024-10-03 06:34 GMT   |   Update On 2024-10-03 06:34 GMT
  • பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவு அதேப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த பெண் சத்தம் போட்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு ஓடி வந்தனர்.

இதனை கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்த பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News