புதுச்சேரி

சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டியதாக வழக்கு- யூடியூபர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2024-10-01 12:30 GMT   |   Update On 2024-10-01 12:30 GMT
  • சிக்கா, சுமி மற்றும் உறவினரான யூடியூபர் திருச்சி சூர்யா ஆகியோரும் சிறுமியை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
  • 3 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ்-1 சிறுமிக்கு, மதுரையைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான சிக்கா, சுமி தம்பதியின் மகனான மதுரை சங்கயா வீதி, அஷ்ரப் அலி (வயது 24) ஆபாச வீடியோ அனுப்பியதுடன், சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்ற மிரட்டி உள்ளார்.

சிறுமியின் தாய் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 25-ந்தேதி அஷ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அஷ்ரப் அலியின் பெற்றோர் சிக்கா, சுமி மற்றும் உறவினரான யூடியூபர் திருச்சி சூர்யா ஆகியோரும் சிறுமியை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3 பேரையும் சைபர் கிரைம் போலீசில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, யூடியூபர்கள் சிக்கா, சுமி, சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி திருச்சி சூர்யா 3 பேரும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆஜராகினர்.

இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். 3 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News