புதுச்சேரி
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஓணம் விழா
- ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
- கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார்.