புதுச்சேரி

புதுச்சேரியில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5¾ கோடி பட்டுவாடா

Published On 2024-09-15 05:00 GMT   |   Update On 2024-09-15 05:00 GMT
  • கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.
  • நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளிலும் நடந்தது.

இதற்காக புதுச்சேரியில் 15 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வும் செயல்பட்டது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 6 ஆயிரத்து 305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 857வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை, நஷ்டஈடு, நிவாரணம் என மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்து 756 உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

Tags:    

Similar News