செய்திகள் (Tamil News)

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

Published On 2016-06-15 05:56 GMT   |   Update On 2016-06-15 05:57 GMT
ஜிம்பாப்வேவுடனான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று மதியம் ஹராரேலிஸ் தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 பேர்ட்டி கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று மதியம் ஹராரேலிஸ் தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. பேட்டிங்கும் நன்றாக உள்ளதால் இன்றும் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News