செய்திகள் (Tamil News)
புனே ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி அசத்தல் சதம்
புனே ஒருநாள் கிரிக்கெட்டில் இக்கட்டான நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.
351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல் (8), தவான் (1), யுவராஜ் சிங் (15), டோனி (6) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 63 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.
ஒருபக்கம் விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் மறுபக்கம் விராட் கோலி நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல் மாதிரி நிலைத்து நின்றார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி நிலைத்து நின்று விளையாட கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினார். 32-வது ஓவரை வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கிய விராட் கோலி சதம் அடித்தார். அவர் 93 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்தார். இது அவரது 27-வது சதமாகும்.
351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் லோகேஷ் ராகுல் (8), தவான் (1), யுவராஜ் சிங் (15), டோனி (6) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 63 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.
ஒருபக்கம் விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் மறுபக்கம் விராட் கோலி நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல் மாதிரி நிலைத்து நின்றார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி நிலைத்து நின்று விளையாட கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினார். 32-வது ஓவரை வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கிய விராட் கோலி சதம் அடித்தார். அவர் 93 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்தார். இது அவரது 27-வது சதமாகும்.