செய்திகள் (Tamil News)

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

Published On 2017-02-10 03:18 GMT   |   Update On 2017-02-10 03:18 GMT
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
செஞ்சூரியன் :

இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கிலும், 20 ஒவர் போட்டி தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றன. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 4-0 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்தியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி போராடும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்கா அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். தற்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் 118 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. நூலிழை வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

Similar News