செய்திகள்

அகில இந்திய வீல்சேர் டென்னிஸ் கர்நாடகா வீரர் சாம்பியன்

Published On 2018-08-05 10:41 GMT   |   Update On 2018-08-05 10:41 GMT
சென்னையில் நடந்த அகில இந்திய வீல்சேர் டென்னிஸ் போட்டியில் கர்நாடகா வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
மெரினா ஓபன் அகில இந்திய ரேங்கிங் வீல்சேர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது.

இதன் ஒற்றையர் பிரிவில் கர்நாடகா வீரர் சேகர் வீராசாமி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 6-4, 7-5 என்ற கணக்கில் தமிழகத்தை சேர்ந்த பாலச்சந்தரை தோற்கடித்தார்.

பெண்கள் பிரிவில் பிரதிமா ராவ் (கர்நாடகா), வெற்றி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சேகர் வீராசாமி- பாலச்சந்தர் ஜோடியும், பெண்கள் இரட்டையரில் பிரதிமா- ஷில்பா ஜோடியும் வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவில் ஆக்கி ஒலிம்பியன் வி.பாஸ்கரன், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவன சி.எஸ்.ஆர், தலைவர் பனீஷ்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News