விளையாட்டு

டயமண்ட் லீக் இறுதிச்சுற்று: இந்திய வீரர் சாப்லே ஏமாற்றம்

Published On 2024-09-13 20:45 GMT   |   Update On 2024-09-13 20:45 GMT
  • ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
  • சாப்லே 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

பிரஸ்சல்ஸ்:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

கென்ய வீரர் முதலிடமும், மொராக்கோ வீரர் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 8 நிமிடம் 14.18 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News