கிரிக்கெட் (Cricket)
null

SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் - அடுத்த இன்னிங்ஸ்-க்கு ரெடியான தினேஷ் கார்த்திக்

Published On 2024-08-06 06:20 GMT   |   Update On 2024-08-06 06:24 GMT
  • பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
  • முதல் முறையாக இந்த தொடரில் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெறுகிறார். இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கும் புதிய SA20 சீசனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News