கிரிக்கெட் (Cricket)

காம்பீர் மை பாய்! இப்பவும் ஒரு அப்பாவி பையன் தான்.. மனம் திறந்த பால்ய கால பயிற்சியாளர்

Published On 2024-08-06 02:55 GMT   |   Update On 2024-08-06 02:55 GMT
  • காம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
  • அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சுபாவம் குறித்து அவரது இளமைக்கால  கிரிக்கெட் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

 

காம்பீரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வரும் பரத்வாஜ், 12 -13 வயது சிறுவனாக இருக்கும்போது கூட காம்பீர் சிறிய தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாதவராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமல்ல இப்போதும் காம்பீர் ஒரு அப்பாவியான சிறுவன்தான். அவரால் பிறருக்கு தீங்கு நினைக்கவே முடியாது. ஒரு 12 வயது பையன் போலவே இப்போதும் அவர் உள்ளார்.

 

பலர் அவர் திமிர்பிடித்தவர் என்று கருதுகின்றனர். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அது தொடர்புடையது. சிறு வயதில் நெட்டுக்குள் அவரை நான் விளையாட வைப்பதுண்டு. அந்த மேட்ச்களில் தொற்றால் கூட காம்பீர் அப்படி அழுவார். அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.  

 

Tags:    

Similar News