கிரிக்கெட் (Cricket)

முதல் டெஸ்ட்: வங்கதேச அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த சுப்மன் கில்

Published On 2024-09-21 23:54 GMT   |   Update On 2024-09-21 23:54 GMT
  • இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
  • வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கில் சதமடித்தார்.

சென்னை:

இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 113 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ரிஷப் பண்ட், சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர். ரிஷப் பண்ட் 109 ரன் அடித்து அவுட்டானார்.

இந்தியா 64 ஓவரில் 4 விக்கெட்டுக்கு து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுப்மன் கில் 119 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது..

இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன பிறகு, 2-வது இன்னிங்சில் சதமடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

Tags:    

Similar News